ரயில்வே மேம்பால திட்டப் பணி அடிக்கல் நாட்டு விழா!

ரயில்வே சாலை மேம்பால திட்டப்பணிக்கு இந்திய பிரதமர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலைநகர் நகராட்சியில் உள்ள பேரமனூர் ரயில்வே சாலை மேம்பால திட்டப்பணிக்கு இந்திய பிரதமர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கல்வெட்டுகளை திறந்து வைத்தார். உடன் ரயில்வேத்துறை உயர் அதிகாரிகள், மறைமலை நகர் நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன்,திமுக நிர்வாகிகள்,ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story