கிராம பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை !

கிராம பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை !

சோதனை

காஞ்சிபுரம் தொகுதியில், லோக்சபா தேர்தலுக்கான நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் தொகுதியில், லோக்சபா தேர்தலுக்கான நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைத்து, பணப் பட்டுவாடா செய்தல் போன்ற தேர்தல் முறைகேட்டை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமப் புறங்களிலும், குறிப்பிட்ட இடைவெளி துாரத்தில் போலீசார் வாகன சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் வாக்காளர்களுக்கு மதுபானம், பணம், பரிசுப் பொருட்கள் போன்றவை வழங்குவதை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறாமல் இருக்க வழிவகுக்கும் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது."

Tags

Next Story