காதலியுடன் விஷம் குடித்த கள்ளக்காதலனும் சாவு போலீசார் விசாரணை

காதலியுடன் விஷம் குடித்த கள்ளக்காதலனும் சாவு போலீசார் விசாரணை

காதலியுடன் விஷம் குடித்த கள்ளக்காதலனும் சாவு

சேலத்தில் காதலியுடன் விஷம் குடித்த கள்ளக்காதலனும் சாவு. போலீசார் நடத்திய விசாரணையில் ஊரில் உள்ளவர்கள் தவறுதலாக பேசுவார்கள் என நினைத்து இருவரும் விஷம் குடித்தது விசாரணையில் தெரிய வந்தது.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே நீர்முள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்த சதாசிவம் மகள் முத்தமிழ் இளவரசி (வயது 20). இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த லாரி டிரைவர் சக்திவேல் (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதற்கிடையே வீட்டை விட்டு வெளியேறிய கள்ளக்காதலர்கள் சில நாட்கள் வெளியே தங்கினர். ஊருக்கு வந்த அவர்கள் திடீரென விஷம் குடித்தனர். இருவரையும் உறவினர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முத்தமிழ் இளவரசி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சக்திவேல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஊரில் உள்ளவர்கள் தவறுதலாக பேசுவார்கள் என நினைத்து இருவரும் விஷம் குடித்தது விசாரணையில் தெரிய வந்தது.

Tags

Next Story