கேட்பாரற்றுக் கிடந்த 51 வாகனங்கள் மீட்பு !

கேட்பாரற்றுக் கிடந்த 51 வாகனங்கள் மீட்பு !

வாகனங்கள்

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நீண்ட நாள்களாக கேட்பாரற்று கிடந்த 51 வாகனங்களை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
பாலக்கரை - மதுரை சாலையில் கால்நடை அலுவலகம் அருகே நின்ற 5 இருசக்கர வாகனங்கள், நெல்பேட்டை சந்திப்பில் நின்ற 4 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை காந்திசந்தை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா். இதுபோல பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் 12 இருசக்கர வாகனங்கள், மணல்வாரித்துறை சாலையில் 10 இருசக்கர வாகனங்களை பாலக்கரை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா். இதேபோல, அரியமங்கலம் போலீஸாா் ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனத்தையும், கண்டோன்மென்ட் போலீஸாா் 9 வாகனங்களையும், நீதிமன்ற வளாக போலீஸாா் 7 இருசக்கர வாகனங்களையும், விமான நிலைய போலீஸாா் 6 இருசக்கர வாகனங்களையும், கோட்டை போலீஸாா் 14 இருசக்கர வாகனங்களையும், உறையூா் போலீஸாா் ஒரு வாகனத்தையும், அரசு மருத்துவமனை போலீஸாா் 14 வாகனங்களையும் என மொத்தம் 51 வாகனங்களை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.

Tags

Next Story