ராமர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு 

ராமர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு 
 ராமர் கோவில்
ராமர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடித்த நபர்களை போலீசார் வலைவிசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் இந்து அற நிலையத் துறைக்கு சொந்தமான ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலை நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி பூஜை முடித்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று அதிகாலையில் மீண்டும் பூசாரி கோயிலுக்கு வந்தார். அப்போது கோயில் வைக்கப்பட்டிருந்த சில்வர் உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அதிலிருந்து ரூபாய் 1500 திருட்டு போயிருந்தது. கோவிலின் தெற்கு பக்கம் உள்ள கதவை உடைத்து மர்ம கும்பல் உள்ளே சென்று இந்த கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கோவிலின் ஸ்ரீகாரியம் ஸ்ரீ ராமச்சந்திரன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த கோயில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story