ஆட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு காவல்துறை வேண்டுகோள் !

ஆட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு காவல்துறை வேண்டுகோள் !

காவல்துறை

ஆட்சியர் அலுவலக பணியாளர்கள் அடையாள அட்டையை எடுத்து வர காவல்துறை வலியுறுத்தி வருகின்றனர்.
கோவை:தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வேட்பாளர்கள் மனு தாக்கல் தேர்தல் விதிமுறைகள் உள்ளிட்ட காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களும் பணியாளர்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பணிக்கு வரும் பொழுது அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும் என காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.அடையாள அட்டை இல்லாத பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்களின் உடைமைகளை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Tags

Next Story