வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

காவலாளியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தஞ்சாக்கூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்கு பிப்.26-ம் தேதி காவல் இருந்த காவலாளி முருகானந்தத்தை (35) ஒரு கும்பல் தாக்கிவிட்டு ரூ.300 ரொக்கம், மொபைல் போனை பறித்துச் சென்றது. தொடர்ந்து அந்த கும்பல் கலியனேந்தல் என்ற இடத்தில் காட்டுப்பன்றிகளை விரட்ட விவசாய நிலத்தில் காவல் இருந்த விவசாயி ராஜ்குமாரை (45) அரிவாளால் வெட்டிவிட்டு மொபைலை பறித்து சென்றது. இதுகுறித்து பழையனூர் போலீஸார் வழக்கு பதிந்தனர். மேலும் டிஎஸ்பி கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் லட்சுமி, எஸ்ஐ நாகாஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணையில் திருப்பாச்சேத்தி ஆவரங்காட்டைச் சேர்ந்த சரண் (19), செந்தாமரை (30), மருதமுத்து (23) ஆகிய மூவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த தனிப்படையினர் 2 மொபைல்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story