டாஸ்மாக் கடையில் திருட்டு, காட்டிக்கொடுத்த சிசிடிவி

டாஸ்மாக் கடையில் திருட்டு, காட்டிக்கொடுத்த சிசிடிவி

செல்வம்

மேலப்பழூவூரில் டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து மதுபானங்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் மேலப்பழூவூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடையின் ஷெட்டர் உடைத்து 13 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் திருடுபோனது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விற்பனையாளர் நாகராஜன் கீழப்பழூவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இச்சம்பவம் குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் ஆனூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரை கைது செய்தனர்.


Tags

Next Story