குழந்தை கடத்தல் - வாட்ஸ் ஆப்பில் பரப்பியவர் கைது !

குழந்தை கடத்தல் - வாட்ஸ் ஆப்பில் பரப்பியவர் கைது !

கைது

காரைக்குடியில் குழந்தை கடத்தப்பட்டதாக வதந்தி பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சுற்று வட்டார பகுதிகளில் குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்திகள் வாட்ஸ் அப் மூலம் பரவி வந்தது. இது உண்மை இல்லை, மக்கள் இதை நம்ப வேண்டாம், இவ்வாறு வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்குடி உட்கோட்டம் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் காரைக்குடி கம்பன்தெரு, முல்லை வீதியைச் சேர்ந்த ராஜ முகமது என்பவர் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் நகர துணைச் செயலாளராக உள்ளார். இவர் தனது செல்போன் மூலம், பல்வேறு குரூப்புகளுக்கு குழந்தை கடத்தப்பட்டதாக வதந்தி பரப்பியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் காரைக்குடி வடக்கு காவல் துறையினர் ராஜா முகமது மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story