போலீஸ் ஏட்டு வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை !

போலீஸ் ஏட்டு வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை !
போலீஸ் விசாரணை
ஆரல்வாய்மொழி அருகே போலீஸ் ஏட்டு வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை.
குமரி மாவட்டம் திருப்பதிசாரம், பூங்கா நகரை சேர்ந்தவர் சரத் பிரசாத் (31). இவர் மகாராஷ்டிராவில் மத்திய ரிசர்வ் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அக்ஷயா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சரத் பிரசாத் மகாராஷ்டிராவில் வேலை பார்த்து வருவதையடுத்து அக்ஷயா கன்னியாகுமரியில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி உள்ளார். வீட்டை சரத் பிரசாத் தந்தை மாணிக்கம் கவனித்து வந்தார். இன்று காலை வீட்டில் சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கதவுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு, பீரோவையும் உடைத்து அதிலிருந்து எட்டு பவுன் நகை திருடப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் இருந்து பணத்தையும் கொள்ளையர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story