திருடு போன மோட்டார் சைக்கிளை மீட்டு தந்த போலீசார்

திருடு போன மோட்டார் சைக்கிளை மீட்டு தந்த போலீசார்

திருட்டு போன மோட்டார் சைக்கிள் 

திண்டுக்கல் அருகே திருடு போன மோட்டார் சைக்கிளை மீட்டு தந்த போலீசார்.
திண்டுக்கல் அருகே திருடு போன மோட்டார் சைக்கிளை சில மணி நேரங்களிலேயே மீட்டு தந்த வத்தலகுண்டு போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் செல்வம் என்பவரின் மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது குறித்து வத்தலகுண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் டி.எஸ்.பி முருகன் தலைமையில் எஸ்.ஐ.ராம்சேட் மற்றும் குற்றபிரிவு போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து உடனடியாக மோட்டார் சைக்கிளை மீட்டு கொடுத்தனர். புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே மோட்டார் சைக்கிளை மீட்டு கொடுத்த போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story