வேலை வாங்கி தருவதாக பண மோசடி போலீசார் வழக்கு பதிவு

வேலை வாங்கி தருவதாக பண மோசடி போலீசார் வழக்கு பதிவு

வேலை வாங்கி தருவதாக பண மோசடி போலீசார் வழக்கு பதிவு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி-மூவர் மீது வழக்குப்பதிவு.
கோவை டவுன்ஹால் பகுதியில் வசித்து வருபவர் பல்கீஸ் பேகம்(40).இவரது மகனை வெளிநாட்டில் வேலையில் சேர்க்க துடியலூர் அருகில் தொப்பம்பட்டி பகுதியில் இயங்கி வரும் HR Solutions என்ற நிறுவனத்தில் தனது மகனின் பாஸ்போர்ட் மற்றும் பணம் 80,000 ரூபாயை செலுத்தி உள்ளார்.ஆவணங்கள் மற்றும் பணத்தை பெற்று கொண்ட நிறுவனம் பணியினை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பல்கீஸ் பேகம் ஆவணங்களை திருப்பி கொடுக்க கேட்டபோது அதனை திருப்பி தர நிறுவனம் மறுத்ததுடன் பணத்தையும் திருப்பி தராததால் பல்கீஸ் பேகம் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் HR Solutions நிறுவவனத்தை சேர்ந்த அனிதா,பாலாஜி,சின்னிஸ் நாயர் ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story