போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

சேலம் நீதிமன்றம் 

சேலம் மாவட்டம் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுப்புரத்தினம். இவர் பணி மாறுதல் பெற்று தற்போது நீலகிரி மாவட்டம் சேரன்பாடி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போது விசாரணை நடத்திய 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் மேட்டூர் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பியும் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story