நூல் வாங்கியவர் பண மோசடி செய்ததாக போலீசார் விசாரணை

நூல் வாங்கியவர் பண மோசடி செய்ததாக போலீசார் விசாரணை

நூல் வாங்கியவர் பண மோசடி செய்ததாக போலீசார் விசாரணை

குமாரபாளையம் அருகே நூல் வாங்கியவர் பண மோசடி செய்ததாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேட்டுக்கடை பகுதியில் நூல் மில் வைத்து நடத்தி வருபவர் வெங்கடேசன், 64. இவரிடம் ஈரோட்டை சேர்ந்த கணேசன், 51, என்பவர் சிறுக, சிறுக வியாபாரம் செய்த வகையில், 13 லட்சத்து 9 ஆயிரத்து 588 ரூபாய், கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்ததால், நாமக்கல் எஸ்.பி. அலுவகத்தில் புகார் செய்யப்பட்டு, குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story