ஆன்லைனில் இழந்த பணத்தை மீட்டு கொடுத்த போலீஸ்!

ராணிப்பேட்டையில் ஆன்லைனில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை எடுத்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் சையத் அபியுல்லாஹ். களத்தூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர்கள் இருவரும் ஆன்லைனில் பணத்தை இழந்ததாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் பேரில் இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சையத் அபியுல்லா ( ரூ .38,000) மற்றும் புருஷோத்தமன் (ரூ.45,000) பணம் ரூபாய் 83 ஆயிரத்தை மீட்டனர். பின்னர் இன்று அவர்களை ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு வரவழைத்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் அவர்களிடம் பணத்தை ஒப்படைத்தார்.

Tags

Next Story