அரசு அங்காடியில் பட்டுக்கூடுகளின் விலை சரிவு

அரசு அங்காடியில் பட்டுக்கூடுகளின் விலை சரிவு

விலை சரிவு 

தர்மபுரி பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக் கூடுகளின் விலை குறைந்தது

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் நான்கு ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்த அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 958 கிலோவாக இருந்தது. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக 592 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 392 ரூபாய்க்கும், சராசரியாக 542.48 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரத்து 159 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.

Tags

Next Story