முளைப்பாரியில் பக்தர்கள் ஊர்வலம்

முளைப்பாரியில் பக்தர்கள் ஊர்வலம்
தென்காசி அருகே முளைப்பாரியில் பக்தர்கள் ஊர்வலம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம், வேட்டைகாரன்குளம் முத்துமாரி அம்மன் கோவில் முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம், வேட்டைகாரன்குளம் முத்துமாரி அம்மன் கோவில் கொடை விழாவின் முக்கிய நாளான நேற்று இரவு காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் விநாயகர், முத்துமாரி அம்மன், இருக்கன்குடி மாரியம்மன், பேச்சியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் வடிவங்களில் முளைப்பாரி எடுத்து கிராமத்தின் அனைத்து தெருக்கள் நீதி ரீதியாக மேளதாளத்துடன் முழங்க ஊர்வலம் எடுத்துச் சென்றனர். சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Tags

Read MoreRead Less
Next Story