கொசு வர்த்தி நெருப்பு படுக்கையில் பரவி தீப்பிடித்த நிலையில் புரோட்டா மாஸ்டர் பலி

கொசு வர்த்தி நெருப்பு  படுக்கையில் பரவி தீப்பிடித்த நிலையில்  புரோட்டா மாஸ்டர் பலி

புரோட்டா மாஸ்டர் பலி

பொன்னேரி புரத்தில் கொசு வர்த்தி நெருப்பு படுக்கையில் பரவி தீப்பிடித்த நிலையில் புரோட்டா மாஸ்டர் பலி. போலீசார் விசாரணை.
திருச்சி அரியமங்கலம் காவேரி நகர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (42). இவர் பொன்மலைப்பட்டி பொன்னேரி புரத்தில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 10ம் தேதி மது அருந்திவிட்டு ஓட்டலில் உள்ள அறையில் தூங்கினார். அப்போது தனது அருகில் கொசுவர்த்தி சுருளை பற்ற வைத்திருந்தார். கொசு வர்த்தி நெருப்பு ஷாஜ கான் படுக்கையில் பரவி தீப்பிடித்தது. இதில் மேலும் தீ பரவி ஷாஜகான் மீது பிடித்தது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story