பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஜூன் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஜூன் 15ஆம் தேதி  நடைபெறவுள்ளது

மாவட்ட ஆட்சியர் 

உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஜூன் 15ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் வட்டம், அருமடல் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பிம்பலூர் கிராமத்தில், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தலைமையிலும், குன்னம் வட்டம், பெண்ணக்கோணம் வடக்கு கிராமத்தில் சார் ஆட்சியர், தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி தெற்கு கிராமத்தில், தனித்துணை ஆட்சியர் தலைமையிலும் ஜூன் 15ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம், தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story