அதிசய கன்று குட்டியை காண பொதுமக்கள் ஆர்வம்

அதிசய கன்று குட்டியை காண பொதுமக்கள் ஆர்வம்

 6 கால்களுடன் பிறந்த கன்று 

பழனி தும்மலப்பட்டி கிராமத்தில் கன்று ஈனுவதற்கு பசுமாடு சிரமப்பட்ட நிலையில், விரைந்து வந்த கால்நடை மருத்துவர் அளித்த சிகிச்சையால் இன்று பசுமாடு சிரமம் இன்றி கன்றை ஈன்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தும்மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று கன்று ஈன்றது. கன்று ஈனுவதற்கு பசுமாடு சிரமப்பட்ட நிலையில், விரைந்து வந்த கால்நடை மருத்துவர் அளித்த சிகிச்சையால் இன்று பசுமாடு சிரமம் இன்றி கன்றை ஈன்றது. ஆனால், கன்று 6 கால்களுடன் பிறந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சர்யமடைந்தனர். இந்த அதிசய கன்று குட்டி மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

Tags

Next Story