குளச்சல் அருகே புதிய கட்டிடப் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் !!

குளச்சல் அருகே புதிய கட்டிடப் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் !!

பொதுமக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இந்த கட்டிடம் வழிபாட்டு தலத்திற்கு கட்டப்படுவதாகவும், பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் கட்டப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள இரும்பிலிக்கரை என்ற பகுதி உள்ளது. இது ரீத்தாபுரம் பேரூராட்சி 9-ம் வார்டில் அமைந்துள்ளது. இங்கு வெளியூரை சேர்ந்த நபர் ஒருவர் புதிதாக கட்டிடம் கட்டி வருகிறார். இந்த கட்டிடம் வழிபாட்டு தலத்திற்கு கட்டப்படுவதாகவும், பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் கட்டப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தொழிலாளர்கள் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த இரும்பிலிக்கரை பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் அங்கு திரண்டு கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்ட போது, அங்கு வணிக வளாகம் கட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்றுள்ளார் என தகவல் கிடைத்தது. இதனை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வணிக வளாகம் பேரில் வழிபாட்டு தலம் கட்ட முயற்சிப்பதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.தொடர்ந்து கட்டிட உரிமையாளரும் பொதுமக்களும் நடத்திய பேச்சு வார்த்தையில் வரும் புதன்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story