பெண்ணை தாக்கி டூவீலர் பறித்த ரவுடி கைது

பெண்ணை தாக்கி டூவீலர் பறித்த ரவுடி கைது

பெண்ணை தாக்கி டூவீலர் பறித்த ரவுடி கைது

சேலத்தில் பணம் கேட்டு பெண்ணை தாக்கி டூவீலர் பறித்த ரவுடிக்கு சிறை.
சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சித்தேஸ்(எ) சித்தேஸ்வரன்(43). பிரபல ரவுடியான இவர் மீது, 4 கொலை வழக்கு உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. இவர் மணக்காட்டை சேர்ந்த நண்பரிடம் பணம் கேட்டு, அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அந்நேரத்தில் அவரது மனைவி மட்டும் அங்கு இருந்துள்ளார். அவரிடம் தகராறு செய்த ரவுடி சித்தேஸ்வரன், அப்பெண்ணை தாக்கியதுடன், அவரது டூவீலரை பறித்து சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில், அஸ்தம்பட்டி எஸ்.ஐ. புவனேஸ்வரி, ஏட்டுக்கள் ரமேஷ், பெரியநாயகம், செல்லகண்ணு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தி, ரவுடி சித்தேஸ்வரனை கைது செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story