நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை பணி துவக்கம்

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலை பணி துவக்கம்

சாலை பணிகள் துவக்கம் 

மூலனூர் பேரூராட்சி மேட்டுப்பட்டி அருகில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணியினை செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி, மேட்டுப்பட்டி அருகில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வஞ்சிவலசு ரோடு முதல் மேட்டுப்பட்டி ஆதிதிராவிடர் காலனனி வரை தார் சாலை மேம்பாட்டு பணியினை தமிழ் வளர்ச்சி செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்கள். உடன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story