காட்டுயானையின் அட்டகாசம்

காட்டுயானையின் அட்டகாசம்

காட்டுயானையின் அட்டகாசம்

பழனி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பொருந்தல், புளியம்பட்டி பகுதிகளில் தென்னை, கரும்பு, நெல் விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக புளியம்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் புகும் காட்டுயானைகள் பயிர்களை சேதப்படுத்தி செல்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதன்படி நேற்று இரவு புளியம்பட்டியை சேர்ந்த சகோதரன் என்பவரின் தோட்டத்தில் ஒற்றையானை 30-க்கும் மேல் தென்னை மரங்களை ஒடித்து தின்று சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு விவசாயி பார்த்தபோது யானை சேதப்படுத்தி கொண்டிருந்தது. பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

Tags

Next Story