பெண்ணை கட்டிப் போட்டு நகையை பறித்துச்சென்ற கொள்ளையன்

பெண்ணை கட்டிப் போட்டு நகையை பறித்துச்சென்ற கொள்ளையன்

நத்தம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு நகையை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.




நத்தம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப் போட்டு நகையை பறித்துச் சென்றகொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சேர்வீடு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவரது மனைவி சுமதி கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டில் நுழைந்த மர்ம நபர் ரசாயணப் பொடியை தூவி விட்டு அவர் அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்க செயினையும் ஒரு பவுன் மோதிரத்தையும் எடுத்துக் கொண்டு அவரை கட்டிப் போட்டுவிட்டு மாயமாகிவிட்டார். இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபரை தேடி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் உள்ள காட்சிகளை வைத்து போலீஸார் ஆய்வு செய்தனர். இந்த திருட்டில் ஈடுபட்ட நபர் பழைய குற்றவாளி சூர்யா (27) என்பதும் அவர் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நெடுமரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. இதையடுத்து நெடுமரத்திற்கு சென்ற நத்தம் போலீஸார் அங்கு வைத்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story