வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி

பைல் படம் 

வேதாரண்யம் அருகே கோடியகரையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் வேதாரணியம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கோடியக்கரை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் கண்ணதாசன் வயது 40. கூலி தொழிலாளி இவர் பிப்ரவரி 15ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு வீட்டில் பின்புறம் உள்ள மற்றொரு வீட்டில் உள்ள பழைய கட்டிடத்தில் வைத்திருந்த அடுப்பு எரிக்கும் விறகினை எடுப்பதற்காக சென்றுள்ளார் அப்போது அந்த பழைய கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து மார்பு மற்றும் விலா பகுதியில் கண்ணதாசன் படு காயமடைந்தார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேதாரணியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட கண்ணதாசன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இது தொடர்பாக கண்ணதாசன் மனைவி அஜிதா வேதாரணியம் காவல் நிலையத்தில் பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Tags

Next Story