பலசரக்கு கடையின் மேற்கூரை இடிந்து விபத்து

பலசரக்கு கடையின் மேற்கூரை இடிந்து விபத்து
மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து
விருதுநகரில் பலசரக்கு கடையின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
விருதுநகர் வாடியன் தெரு பகுதியில் பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான பலசரக்கடை செயல்பட்டு வருகிறது மிகவும் பழமையான கட்டிடத்தில் இந்த கடை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த கடை திடீரென இடிந்து விழுந்தது ஞாயிற்றுக்கிழமை என்பதால் பணியாட்கள் மற்றும் கடையின் உரிமையாளர் இல்லாத காரணத்தினால் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை, ஆனால் கடையில் இருந்த சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்கள் ஈடுபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்தது. இதை அடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story