சிறுவனை மாடு முட்டும் காட்சி... சமூக வலைதளத்தில் வைரல் !

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டுக்கு செல்ல முயன்ற சிறுவன் மாடு தாக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் தாக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தடுக்க மாடுகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் எச்சரிக்கைகள் விடப்படும் இன்னும் சாலையில் மாடுகள் சுற்றி திரிவதும் பலர் தாக்கப்பட்டு வருவதும் தொடர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெரு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீட்டிற்கு செல்ல முயன்ற போது மாடு ஒன்று வருவதைப் பார்த்து ஓரமாக நின்றிருந்த போது சற்றும் எதிர்பாராத நேரத்தில் மாடு அந்த சிறுவனை வயிற்று தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மற்றும் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளால் பலர் பாதிக்கப்படுவதாகவும் எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story