மழை ஓய்ந்த நிலையிலும் மழை நீர் வடியாததால் பள்ளிக்கு விடுமுறை

ராஜபாளையம்த்தில் மழை ஓய்ந்த நிலையிலும், மழை நீர் வடியாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புளியங்குளம் கண்மாய் பகுதியில் வெளியேறும் மழைநீர் அதிகரித்ததால் பெரிய பாலம் மற்றும் கட்டையன் தெரு பகுதியில் மழைநீர் சூழ்ந்தது இதை வட்டாட்சியர் ராமசந்திரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஜேசிபி இயந்திர உதவியுடன் தண்ணீரை வெளியேற்றினர். இந்த நிலையில் இராஜபாளையம் நீதிமன்றம் அருகே செயல்படும் தனியார் ஆண்கள் உயர் நிலைப் பள்ளியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பள்ளி வளாகம் குளம் போல் இருப்பதால் பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது மேலும் பத்தாம் வகுப்பு 11 ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்பு நடத்துவதாகவும் அறிவித்துள்ளது. தொடர்ந்து கண்மாயில் இருந்துநீர் வரத்த அதிகரிப்பதால் பள்ளி வளாகம் நீரில் மூழ்கி உள்ளது வருவாய்த்துறையினர் உடனடியாக அருகே உள்ள ஓடைகளை தூர்வாரி தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story