கழிவுநீர் குழாய் சேதம் - சாலையில் தேங்கும் அவலம்

கழிவுநீர் குழாய் சேதம் - சாலையில் தேங்கும் அவலம்

கழிவுநீர் குழாய் சேதம்

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் சாலையில் கழிவுநீர் குழாய் சேதமடைந்ததால் அதனை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் ஜி.என்.டி. சாலையில் கழிவுநீர் குழாய் உள்ளது. அந்த கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் கழிவுநீர் ஆறு போல ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கோடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story