வெளியூர் சென்று வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வெளியூர் சென்று வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருட்டு 

கோவை: இடையர்பாளையம் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் கோபாலன்(81). தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியற்றி ஓய்வு பெற்ற இவர் கடந்த 5ஆம் தேதி மனைவியுடன் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கபட்டிருந்த தங்க செயின், மோதிரம், வளையல்கள் என பத்து பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது.இதனை தொடர்ந்து கோபாலன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களுடன் வந்த கவுண்டம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உடைக்கபட்ட வீட்டின் கதவில் பதிவாகியுள்ள கைரேகை கொண்டு ஏற்கனவே குற்ற சம்பவங்களில் உள்ளவர்களின் கைவரிசையா அல்லது வேறு நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story