ஒப்பந்ததாரர் போராட்டத்தில் ஈடுபட்டதால் உடனடியாக கடை அகற்றம்!

ஒப்பந்ததாரர் போராட்டத்தில் ஈடுபட்டதால் உடனடியாக கடை அகற்றம்!

கடை அகற்றம்

நகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்ட கடை பிடித்து அகற்றப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி தரணம்பேட்டை பஜார் ராபின்சன் குளக்கரை பகுதியில் காய்கறி உள்ளிட்ட தண்டல் வசூல் செய்யும் ஒப்பந்ததாரராக ஆர்.மூர்த்தி என்பவர் உள்ளார். ராபின்சன் குளக்கரையின் ஒரு பகுதியில் நகராட்சி அனுமதி இன்றி கடை ஒன்று கட்டப்பட்டு வருவதாக கூறி அவர் அந்த கடை கட்டும் இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையிலும் அவர் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு உரிய அனுமதியின்றி கட்டப்படும் நகராட்சி கடை அகற்றப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். பின்னர் நகராட்சி ஆணையாளர் எம்.மங்கையர்க்கரசன் உத்தரவின் பேரில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கடை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

Tags

Next Story