வேப்பனப்பள்ளி அருகே இருந்த ஒற்றைக்காட்டு விரட்டியடிப்பு

வேப்பனப்பள்ளி அருகே இருந்த ஒற்றைக்காட்டு விரட்டியடிப்பு
வேப்பனப்பள்ளி அருகே இருந்த ஒற்றைக்காட்டு விரட்டியடிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி வனப்பகுதியில் கடந்த வாரம் கர்நாடக வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றைக் காட்டு யானை முகாமிட்டு பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது.

இதனால் இந்த காட்டு யானையை வேறு வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் வனத்துறைக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இந்த ஒற்றை காட்டு யானையை நேற்று மாலை தமிழக வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து,

கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர். இதனால் இப்பகுதி பொது மக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags

Next Story