திருமணம் செய்து வைக்க கோரி மது போதையில் தாயுடன் சண்டையிட்ட மகன் பலி

திருமணம் செய்து வைக்க கோரி  மது போதையில் தாயுடன் சண்டையிட்ட மகன்  பலி

காவல் நிலையம்

திருமணம் செய்து வைக்க கோரி மது போதையில் தாயுடன் சண்டையிட்ட மகன் பலியானர்.

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் வயது 25 மொட்டையச்சாமி இவர் மது அருந்திவிட்டு தனக்கு திருமணம் முடித்து வைக்க கோரி கடந்த பதினொன்றாம் தேதி மாலை 5 மணி அளவில் தனது தாய் சீதாலட்சுமியுடன் வாக்குவாதத்தில் மது போதையில் தாயுடன் சண்டை போட்ட அவர் எறும்பு சாக்பிசை கடித்ததாகவும் கூறப்படுகிறது.

அதை அவருடைய தாய் தட்டி விட்டதை அடுத்து வீட்டின் சமையலறை உத்தரத்தில் சேலையால் மொட்டைச்சாமி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் சீதாலட்சுமி அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாகவும் அப்பொழுது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஊரக காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story