சொத்து விவகாரத்தில் தாயைக் கொன்ற மகன் கைது !

சொத்து விவகாரத்தில் தாயைக் கொன்ற மகன் கைது !

கைது

நிலத்தை எழுதி தர கேட்டு தாயைக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
கண்டாச்சிபுரம் அடுத்த பழைய கருவாட்சி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,72; விவசாயி. இவரது மனைவி ஆகாசவாணி,60; இவர்களுக்கு அருள் அய்யப்பன், 32; ஹரி, 29; ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் அருள் அய்யப்பன், தனது பெயருக்கு நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அருள் அய்யப்பன், தனது தாயிடம் நிலத்தை கேட்டு தகராறு செய்தார். அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த அருள் அய்யப்பன் அவர் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றார். அதில் படுகாயமடைந்த ஆகாசவாணியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அன்று நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று அருள் அய்யப்பனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story