மாணவி திடீர் மாயம் !

மாணவி திடீர் மாயம் !
மாயம்
நாகர்கோவிலில் 14 வயதான எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சம்பவ தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மாணவி மாயமானார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 14 வயதான எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சம்பவ தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மாணவி மாயமானார்.இதையடுத்து மாணவியின் பெற்றோர் அந்தப் பகுதி முழுவதும் தேடியதுடன், பின்னர் தொடர்ந்து உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தேடியும் மாணவி தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதை அடுத்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்கள். போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அந்த மாணவி அந்த பகுதி வழியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அதன் பிறகு மாணவி எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story