ஆசிரியர் பிரம்பால் தாக்கியதால் மாணவி மருத்துவமனையில் அனுமதி!

ஆசிரியர் பிரம்பால் தாக்கியதால் மாணவி மருத்துவமனையில் அனுமதி!

பிரம்பால் அடித்த ஆசிரியர் 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இந்த நிலையில் கோடியூர் பகுதியைச் சேர்ந்த மாணவி எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.இவர் ஆங்கில பாடத்தில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் ஆங்கில ஆசிரியர் மகேஷ் மூங்கில் பிரம்பால் அவரை கையில் தாக்கி உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக மாணவியின் கட்டைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மாணவியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story