மதுவிலக்கை அமல்படுத்த கோரி தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுவிலக்கை அமல்படுத்த கோரி  தமிழர் தேசம் கட்சியினர்  ஆர்ப்பாட்டம்
 கண்டன ஆர்ப்பாட்டம் 
கள்ளச்சாராய மரணத்தை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழர் தேசம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2023ம் ஆண்டில் விழுப்புரம், மரக்காணம் , செங்கல்பட்டில், கள்ளச்சாராயம் அருந்தி 30-க்கும் மேற்பட்ட பலியாகி உள்ளனர் . இந்த சம்பவம் நடந்து ஓராண்டுகள் ஆன நிலையில் மீண்டும் இந்த வருடம் ஜூன் மாதம் 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 60 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் துயரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் மேலும் இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு .க . ஸ்டாலின் பொறுப்பேற்று உடனடியாக பதவியை விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதிகளில் கூறியது போல் தமிழக அரசு தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழர் தேசம் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story