ஓட்டுப்பதிவு மெசின்களில் சின்னங்கள் பதிவு செய்யும் பணி

குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு மெசின்களில் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் பதிவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு மெசின்களில் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் பதிவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டன. ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, அரசியல் கட்சியினர் பிரசார பணிகளையும், அரசு அதிகாரிகள் தேர்தல் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்வதிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக, ஓட்டுப்பதிவு மெசின்களில் அரசியல் கட்சியினர் சின்னங்கள், வேட்பாளர் பெயர்கள் பதிவு செய்யும் பணிகள் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் துவங்கியது. தாசில்தார் சண்முகவேல், உள்பட பலர் இதற்கான பணிகளை கண்காணித்தனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பெரும்பாலோர் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.

Tags

Next Story