தேரின் பாதுகாப்பு கூரையை புதிய இடத்திற்கு மாற்றியமைக்கும் பணி

தேரின் பாதுகாப்பு கூரையை புதிய இடத்திற்கு மாற்றியமைக்கும் பணி

புதிய தேர் கூரை அமைக்கும் பணி

மாமல்லபுரம் பெருமாள் கோவில் தேரின் பாதுகாப்பு கூரையை, புதிய இடத்திற்கு மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சுவாமி உலா செல்லும் திருத்தேர்உள்ளது. சித்திரை பிரம்மோற்சவத்தில் ஸ்தலசயன பெருமாள், அவதார ஜெயந்தி உற்சவத்தில், பூதத்தாழ்வார் ஆகியோர், தேரில் உலா செல்வர். இத்தேரை, 15 ஆண்டுகளுக்கு முன், பக்தர் ஒருவர் நன்கொடையாக அளித்தார். அதற்கு முந்தைய தேர், கோவில் வளாகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டது. புதிய தேர், அதே பகுதியில் கோவில் வளாகத்திற்குள் நிறுத்தி, பாதுகாப்பு கூரை அமைக்கப்பட்டது. தற்போது, கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு, கடந்த பிப்., 1ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

திருப்பணிகள் உபயதாரர், ஆகமம் மற்றும் வாஸ்து அமைப்பின்படி, கோவில் வளாகத்திற்கு வெளியே தேரை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது. சித்திரை பிரம்மோற்சவ திருத்தேர் உலா உற்சவம், ஏப்., 23ம் தேதி நடந்து முடிந்தபின், தேர்வெளியில் நிறுத்தப்பட்டது.

முந்தைய இடத்தில் உள்ள பாதுகாப்பு கூரையை பிரித்து, தேருக்கு பாதுகாப்பாக அமைக்காமல்தாமதப்படுத்தப்பட்டது. இரண்டு மாதங்களாக,கோடை வெயில், மழை, சூறாவளி காற்று ஆகியவற்றால், திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ள தேர் பாதிக்கப்பட்டது. இதனை நேற்று, முந்தைய இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கூரையை, புதிய இடத்திற்கு மாற்றியமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story