12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

மல்லசமுத்திரத்தில் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் சங்கம் உள்ளிருப்பு போராட்டம்

மல்லசமுத்திரத்தில் கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் சங்கம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக நேற்று, மல்லசமுத்திரம் வட்டாரகல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் தேவராஜன் தலைமையில், 12 அம்ச கோரிக்கைகளான, திருச்சி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் தவறான தணிக்கைத் தடையினை நிவர்த்தி செய்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ 750 தனி ஊதியம் மற்றும் ரூ 500 சிறப்புப்படி தொடர்ந்து வழங்கிட வேண்டும். தவறான தணிக்கைத் தடையினை நிவர்த்தி செய்து தேர்வுநிலை இடைநிலை தலைமையாசிரியர்களுக்கு ரூ 5400தர ஊதியம் வழங்கப்பட வேண்டும். மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு சமன் செய்து இளையோருக்கு இணையான ஊதியம் பணிமூப்பு ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்.

ரூ 800/தொகுப்பூதிய இடைநிலை ஆசிரியருக்கு நிலுவை ஊதியம் பெற்று வழங்கப்பட வேண்டும். தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை ஊதியம் ஆணைகள் வழங்கப்பட வேண்டும். தகுதிகாண் பருவம் மற்றும் பணிவரன்முறை ஆணைகள் வழங்கப்பட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மல்லசமுத்திரம் ஒன்றிய ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாநில பொருளாளர் முருகசெல்வராசன் பேருரையாற்றினார். தகவல் அறிந்து வந்த நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம் மல்லசமுத்திரம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொறுப்பாளர்களுடன் பேசசுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில், மல்லசமுத்திரம் ஒன்றிய ஆசிரியர்களின் 12 அம்சக்கோரிக்கைகளுக்கும் எதிர்வரும் 2024 ஜனவரி முதல் வாரத்தில் முழுமையான தீர்வு காணப்படும் என்று எழுத்துப்பூர்வமாக மல்லசமுத்திரம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தெரிவிப்பர் என்று நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் தெரிவித்தார். இதனடிப்படையில், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Tags

Next Story