மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப சாவு!

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப சாவு!

பைல் படம் 

திருச்செந்தூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ராஜ மணிகண்டன் (20), இவர் தனது நண்பருடன் கரம்பவிளையில் உள்ள சர்ச் முன்பு, மின் கம்பத்தில் சாய்ந்து நின்று நின்று பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story