நண்பர்களும் குளிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பலி

நண்பர்களும் குளிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பலி

பலியான வாலிபர்

கன்னியாகுமரி மாவட்டம் , பூதப்பாண்டியில் குளத்தில் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் , நாகர்கோவில் கோட்டார் முதலியார் விளை பகுதியை சேர்ந்தவர் சுமேஷ் (31) இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் தனது நண்பர்கள் ஓன்பது பேருடன் நேற்று மாலை பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்சகுளம் அருகே ஆலமூட்டு குளத்தில் குளிக்க சென்றுள்ளார். நண்பர்கள் எல்லோரும் குளத்தில் குளித்து கொன்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சுமேஷ் நீரில் மூழ்கியுள்ளார்.

உடன் சென்ற நண்பர்கள் தேடியும் கிடைக்காததால், நண்பர்கள் உடனடியாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்கள். போலீசார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு, நாகர்கோவிலிலுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்கள். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் வந்து குளத்தில் காணாமல் போன சுமேஷை தேடி வருகிறார்கள்.

Tags

Next Story