வாலிபர் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

வாலிபர் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

பெட்ரோல் ஊற்றி கொலை

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் முன்பு வாலிபர் உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இரவு 11மணி அளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் மீது மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். வாலிபர் உயிருடன் எரித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் யார் என்று விவரம் போலீசாருக்கு தெரியவில்லை. அவர் மயக்க நிலையில் இருப்பதால் விசாரிக்க முடியாமல் திணறி வருகின்றனர். போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags

Next Story