மதுபோதையில் ஆட்சியர் அலுவலக மாடியில் இருந்து குதித்த வாலிபர்

மதுபோதையில் ஆட்சியர் அலுவலக மாடியில் இருந்து குதித்த வாலிபர்

செல்வகணபதி 

குடும்ப பிரச்சனை கலந்தாய்வுக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் வந்த வாலிபர் மாடியில் இருந்து குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், இரும்பாலை அருகே சித்தனூர் பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் செல்வகணபதி, (24). இவரது மனைவி விஜி,(20) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளார். செல்வகணபதிக்கு, தினமும் மது அருந்தி விட்டு வீட்டில் பிரச்னை செய்து வந்தார். இதுகுறித்து மனைவி விஜி புகாரின் பேரில் சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரித்தனர். ஆனாலும் கணவரின் தொந்தரவு அதிகமாக, பிரிந்து வாழ முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக கலெக்டர் அலுவலகம், முதல் தளத்தில் உள்ள சமூக நலத்துறையில் கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டிருந்தனர். நேற்று மதியம், 3:00 மணிக்கு விசாரணைக்காக தம்பதியர் வந்தனர். அப்போதும் மது அருந்திவிட்டு தடுமாறியபடி வந்த செல்வகணபதி, சேலம் கலெக்டர் அலுவலகம் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார். இதில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story