மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.6 லட்சம் திருட்டு

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.6 லட்சம் திருட்டு

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.6 லட்சம் திருட்டு  போலீசார் விசாரணை

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.6 லட்சம் திருட்டு. செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் ஏற்காட்டை சேர்ந்தவர் சிரோஜ்கான் (வயது 37). இவர் அங்கு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். அவ்வப்போது செவ்வாய்பேட்டைக்கு வந்து மளிகை பொருட்கள் மொத்தமாக வாங்கிச்செல்வார். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் செவ்வாய்பேட்டைக்கு வந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் ரூ.6 லட்சம் வைத்து விட்டு, அங்க உள்ள ஒரு மளிகை கடைக்கு சென்றார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது ரூ.6 லட்சம் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து அவர் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story