மழையால் மரக்கிளை முறிந்து விழுந்தது!

மழையால் மரக்கிளை முறிந்து விழுந்தது!

கோவையில் மழையால் மரக்கிளை முறிந்து விழுந்தது.


கோவையில் மழையால் மரக்கிளை முறிந்து விழுந்தது.
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அன்னூர், பொகலூர் ,கரியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இந்த நிலையில் அன்னூர் சத்தி சாலையில் உள்ள டீக்கடை ஒன்றின் முன்பு இருந்த மரத்தின் கிளை திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது சாலையில் வாகனங்கள் எதுவும் வராததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் மரத்தின் கிளையை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.இந்த நிலையில் டீக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மரத்தின் கிளை முறிந்து திடீரென சாலையில் விழும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags

Next Story