ஆட்டோவை கொளுத்திய லாரி ஓட்டுநர்

ஆட்டோவை கொளுத்திய லாரி ஓட்டுநர்

தீ வைக்கப்பட்ட ஆட்டோ 

சீர்காழியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோவிற்கு தீ வைத்த லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த மெக்கானிக் ராமலிங்கம் ( வயது 46) என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை சீர்காழி அருகே திட்டை ஊராட்சி குளங்கரை கிராமத்தை சேர்ந்த வினோத் (வயது 32) என்பவர் ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று வினோத் தனது ஆட்டோவை திட்டை ரோடு சந்திப்பில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள டீ கடைக்கு சென்று டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது முன்விரோதம் காரணமாக சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ராமு என்பவர் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் தீ மளவென பரவி ஆட்டோவின் மேற்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்துக்குள்ளான ஆட்டோவையும், ஆட்டோவுக்கு தீ வைத்த லாரி டிரைவர் ராமு என்பவரை அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தென்பாதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story