வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மாயம்
![வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மாயம் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மாயம்](https://king24x7.com/h-upload/2024/07/01/568178-1000030531.webp)
காவல் நிலையம்
அல்லம்பட்டியில் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என வாகனத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் அல்லம்பட்டி வ உ சி தெருவை சார்ந்தவர் பாலாஜி. இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை (யமஹா ஆர்15) தனது வீட்டு முன்பு நிறுத்திவிட்டு 27ஆம் தேதி இரவு உறங்கச் சென்றதாக கூறப்படுகிறது 28ஆம் தேதி காலை வெளியே வந்து பார்த்தபொழுது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தர கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Next Story