கீழே விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி மரணம்

கீழே விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி மரணம்

காவல்துறை

டூ வீலர் நிலை தடுமாறி கீழே விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்புகுட்டி. இவர் நேற்று கீழநத்தம் விலக்கு வழியாக நான்கு வழிச்சாலையில் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி சாலையின் தடுப்பு சுவரில் மோதினார். இதனை தொடர்ந்து அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 4) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story